Thursday 2nd of May 2024 04:33:03 AM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னாரில் தொடரும் முடக்க நிலை.- அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி!

மன்னாரில் தொடரும் முடக்க நிலை.- அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி!


கொரோனா முடக்க நிலை மூன்றாவது நாளாக இன்று திங்கட்கிழமை (23) மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

நகர மத்திய பகுதி வர்த்தக நிலையங்கள் உட்பட போக்கு வரத்து சேவைகள் முழுவதும் முடங்கியுள்ள நிலையில் மக்கள் தேவை கருதி ஒரு சில நடமாடும் வியாபார சேவைகளுக்கு மன்னார் மாவட்டதில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரம் மன்னார் நகர் பகுதியில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளில் இன்றைய தினம் காலை தொடக்கம் மதியம் வரை சேவைகள் இடம் பெற்றது.

அத்துடன் விவசாய செயற்பாடுகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளும் மன்னார் மாவட்டத்தில் சாதாரண அளவில் இடம் பெற்றுவருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE